மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் ஆவண ஒப்படைப்பு விழாவிற்கு திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்குகிறார்

Posted On: 26 MAY 2025 3:13PM by PIB Chennai

புது தில்லியில் இன்று நடைபெற்ற லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் ஆவணத்தை ஒப்படைக்கும் விழாவிற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். யூஜிசி (இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்) விதிமுறைகள் 2023 இன் கீழ் ஒப்புதல் ஆவணத்தை பெறும் இரண்டாவது வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவாகும்.

இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் திருமதி லிண்டி கேமரூன்,  யூஜிசி இடைக்காலத் தலைவர் மற்றும் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, லிவர்பூல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டிம் ஜோன்ஸ், லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான துணைவேந்தர் பேராசிரியர் தாரிக் அலி, வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உலகளாவிய உயர்கல்வியில் நம்பகமான கூட்டாளியாக இந்தியா உருவெடுப்பதை இந்த ஒப்புதல் ஆவணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார். முன்னணி உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் கல்வி கூட்டாண்மையை வலுப்படுத்தும் இந்தியாவின் பயணத்தில் இது மற்றொரு மைல்கல் என்றும், இது தேசிய கல்விக் கொள்கை 2020 ன் பரிந்துரை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வார்த்தைகளை மீண்டும் நினைவுகூர்ந்த அமைச்சர், 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் இலக்கை பிரதமர் நிர்ணயித்துள்ளதாக கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எழுத்துப்பூர்வமாகவும், உணர்வுடனும் செயல்படுத்துவதே இந்த லட்சியத்தை நனவாக்குவதற்கான திறவுகோல் என்று அவர் குறிப்பிட்டார்.  உலகளாவிய கல்வி முறை மூலம் உலகளாவிய குடிமக்களை உருவாக்குவதே  தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முதன்மை பரிந்துரைகளில் ஒன்றாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்துமாறும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியலில் புதுமைக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். உலகளாவிய புதிய தலைமுறை குடிமக்களை உருவாக்குவது முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131284

***

 

AD/SM/GK/LDN/AG/DL


(Release ID: 2131404)