நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

"நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்" குறித்த அறிக்கையை வெளியிட்டது நித்தி ஆயோக்

Posted On: 26 MAY 2025 1:52PM by PIB Chennai

"நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை நித்தி ஆயோக் இன்று வெளியிட்டது, இது நடுத்தர நிறுவனங்களை இந்தியாவின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி இயந்திரங்களாக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை வழங்குகிறது. நடுத்தர நிறுவனங்கள் வகிக்கும் முக்கியமான, ஆனால் குறைவான செயல்திறன் கொண்ட பங்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிறுவனங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும் இலக்குகளை எடுத்துக் காட்டுகிறது.

நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் ஸ்ரீ சுமன் பெரி, நித்தி ஆயோக்கின் உறுப்பினர்கள் டாக்டர் வி.கே. சரஸ்வத், டாக்டர் அரவிந்த் விர்மானி ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 29% பங்களிப்பும், ஏற்றுமதியில் 40% பங்களிப்பும் 60% க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணியமர்த்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் உள்ள கட்டமைப்பை அறிக்கை ஆராய்கிறது.

பதிவுசெய்யப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 97% நுண் நிறுவனங்கள், 2.7% சிறிய நிறுவனங்கள், 0.3% மட்டுமே நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், துறையின் அமைப்பு விகிதாச்சாரமற்ற முறையில் எடைபோடப்படுகிறது:

இந்த 0.3% நடுத்தர நிறுவனங்கள் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 40% பங்களிக்கின்றன, வளர்ச்சியடைந்த பாரதம் 2047 இன் கீழ் இந்தியாவின் சுயசார்பு மற்றும் உலகளாவிய தொழில்துறை போட்டித்தன்மையை நோக்கிய மாற்றத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களை உத்திசார் பங்குதாரர்களாக அறிக்கை அடையாளம் காட்டுகிறது.
 

***

 

AD/SM/GK/LDN/AG


(Release ID: 2131315)