பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிதாக பதவியேற்ற ஜெர்மன் அதிபர் திரு. பிரீட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்தார்


இந்தியா-ஜெர்மனி உத்தி சார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு தலைவர்களும் விவாதித்தனர்

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்

பிரதமர் பிரதமர், அதிபர் மெர்ஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைத்தார்

Posted On: 20 MAY 2025 7:38PM by PIB Chennai

ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசின் அதிபராகப் பதவியேற்றதற்காக திரு. பிரீட்ரிக் மெர்ஸுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரை வாழ்த்தினார்.

 

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா-ஜெர்மனி உத்தி சார் கூட்டாண்மையில் சிறந்த முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டனர். ஜெர்மனியில் இந்திய புலம்பெயர்ந்தோர் அளித்த நேர்மறையான பங்களிப்பை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

 

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

 

 பிரதமர் இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபர் மெர்ஸை அழைத்தார். தலைவர்கள் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2130040)
SM/DL


(Release ID: 2130093)