பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருமிகு கே.வி. ரபியாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 05 MAY 2025 4:49PM by PIB Chennai

பத்மஸ்ரீ விருது பெற்ற திருமிகு கே.வி. ரபியாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

பத்மஸ்ரீ விருது பெற்ற கே.வி. ரபியா அவர்களின் மறைவு அறிந்து கவலை அடைந்தேன். எழுத்தறிவை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது துணிச்சலும், உறுதியும், குறிப்பாக அவர் போலியோவை எதிர்த்துப் போராடிய விதமும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தன. இந்தத் துயரமான தருணத்தில் எனது  எண்ணங்கள்அவரது குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுடன் உள்ளன.”

***

(Release ID: 2127059)

TS/IR/AG/DL


(Release ID: 2127116)