தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2025 பிப்ரவரி மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 15.43 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்
Posted On:
25 APR 2025 11:08AM by PIB Chennai
2025 பிப்ரவரி மாதத்தில் 15.43 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இஎஸ்ஐசியின் தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு வெளிப்படுத்துகிறது.
2025 பிப்ரவரி மாதத்தில் 23,526 புதிய நிறுவனங்கள் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2025 மாதத்தில் இத்திட்டத்தின் கீழ், சந்தா செலுத்திய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,97,04,614 ஆகும். இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தின் 2,91,38,395 எண்ணிக்கையைவிட 5,66,219 உறுப்பினர்கள் தற்போது கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.
இம்மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 15.43 லட்சம் ஊழியர்களில், 7.36 லட்சம் ஊழியர்கள், அதாவது மொத்த பதிவுகளில் சுமார் 47.7% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், சம்பளப் பட்டியல் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, 2025 பிப்ரவரியில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.35 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது. இது தவிர, 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 74 திருநங்கை ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர், இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதற்கான காப்பீட்டு கழகத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை என்பதால், கொடுக்கப்பட்டுள்ள சம்பளப் பட்டியல் தரவுகள் தற்காலிகமானவையாகும்.
***
(Release ID: 2124205)
TS/PKV/RR/KR
(Release ID: 2124219)