எஃகுத்துறை அமைச்சகம்
இந்தியா ஸ்டீல் 2025 – சர்வதேச எஃகு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மும்பையில் ஏப்ரல் 24 முதல் 26 வரை நடைபெறுகிறது: பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
Posted On:
17 APR 2025 3:14PM by PIB Chennai
இந்தியா ஸ்டீல் 2025 கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மும்பையில் 2025 ஏப்ரல் 24 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தற்போது 6வது முறையாக நடைபெற உள்ளது. 2025 ஏப்ரல் 24-ம் தேதி இந்த மாநாடு மற்றும் கண்காட்சியை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
இந்த 3 நாள் நிகழ்வில், எஃகு துறையின் வளர்ச்சி, நிலைத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிகழ்வுகள் இடம் பெறும். தேசிய எஃகு கொள்கைக்கு ஏற்ப, 2030-ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி திறன் என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. எஃகுத் துறையில் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கவும், வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் கொள்கை சீர்திருத்தங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய எஃகு அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி, இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா, மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷு தியோ சாய் உள்ளிட்டோர் 24 ஏப்ரல் 2025 அன்று தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி உள்ளிட்டோரும் மாநாட்டின் முக்கிய அமர்வுகளுக்கு தலைமை வகிக்க உள்ளனர்.
12,000-க்கும் மேற்பட்ட வணிகப் பார்வையாளர்கள், 250 கண்காட்சியாளர்கள், பல்வேறு மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாடு உலக அளவில் மிகப்பெரிய எஃகு தொடர்பான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
************
(Release ID: 2122393)
TS/PLM/RR/KR
(Release ID: 2122428)