பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆப்பிரிக்கா இந்தியா முக்கிய கடல்சார் பயிற்சி 2025

प्रविष्टि तिथि: 12 APR 2025 12:00PM by PIB Chennai

ஆப்பிரிக்கா இந்தியா முக்கிய கடல்சார் பயிற்சியின் தொடக்க பதிப்பு ஏப்ரல் 13 முதல் 18 வரை ஆறு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொமொரோஸ், ஜிபூட்டி, கென்யா, மடகாஸ்கர், மொரீஷியஸ், மொசாம்பிக், சீஷெல்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பங்கேற்பு அடங்கும்.

இந்த முயற்சி  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது, மகாசாகர் என்ற பிராந்தியங்களிடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.

இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் சென்னை மற்றும் ஐஎன்எஸ் கேசரி ஆகியவை முறையே ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தார்-எஸ்-சலாம் வந்தடைந்தன, மேலும் கடல்சார் பயிற்சியின் தொடக்க விழா தான்சானிய மக்கள் பாதுகாப்புப் படையுடன் இணைந்து நடத்தப்படும். இந்தக் கப்பல்களை டிஏ தான்சானியா மற்றும் தொடர்பு குழுவினர் வரவேற்றனர். 

ஏப்ரல் 16 முதல் 18 வரை திட்டமிடப்பட்டுள்ள கடல்சார் பயிற்சி, பங்கேற்கும்  நாடுகளிடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.


மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121218    

*****

RB/DL

(Release ID: 2121218)


(रिलीज़ आईडी: 2121488) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi