பாதுகாப்பு அமைச்சகம்
ஐஓஎஸ் சாகர், தான்சானியாவின் டார் எஸ் சலாமில் முதல் துறைமுகப் பயணம் மேற்கோள்கிறது
Posted On:
13 APR 2025 10:32AM by PIB Chennai
இந்தியப் பெருங்கடல் பணிகளுக்கான (ஐஓஎஸ்) கப்பலாக நியமிக்கப்பட்ட ஐஎன்எஸ் சுனைனா, 2025 ஏப்ரல் 12 அன்று தான்சானியாவின் டார்-எஸ்-சலாம் துறைமுகத்திற்குச் சென்றது. கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 கடற்படை வீரர்களுடன் இந்த கப்பல் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி புறப்பட்டது. கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், சீஷெல்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நட்பு நாடுகள் குழு இதில் அடங்கும்.
ஐஓஎஸ் சாகருக்கு தான்சானியா கடற்படை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த துறைமுக அழைப்பின் போது, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் சேத், 2025 ஏப்ரல் 13 அன்று தொடங்கி வைக்கும் முக்கிய கடற்படை பயிற்சியான அய்கேமி (AIKEYME) பயிற்சியின் துறைமுக கட்டத்திலும் இந்த கப்பல் பங்கேற்கும். செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், கூட்டு உத்திகளை செம்மைப்படுத்துதல், கடல்சார் நடவடிக்கைகளில் செயல்பாட்டுத் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும். இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களான ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கேசரி ஆகியவையும் ஐஎன்எஸ் சுனைனாவுடன் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
ஐஎன்எஸ் சுனைனாவில் உள்ள நட்பு நாடுகளின் வீரர்களின் பங்கேற்பு, உலகளாவிய கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய பயிற்சிகள் மூலம், கூட்டு கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும், பிராந்தியத்தில் கப்பல் பாதைகளின் சுதந்திரமான, பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது.
இந்தக் கப்பல், 2025 ஏப்ரல் 15 அன்று டார் எஸ் சலாமில் இருந்து மொசாம்பிக்கின் நாகாலாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது.
****
PLM/DL
(Release ID: 2121417)
Visitor Counter : 24