குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
09 APR 2025 4:26PM by PIB Chennai
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் மகாவீரரின் எக்காலத்திற்கும் பொருந்தும் போதனைகளான அஹிம்சை, உண்மை, பற்றற்ற தன்மை ஆகியவை மிகவும் இரக்கமுள்ள, இணக்கமான உலகத்தை நோக்கிய நமது பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன. அனைத்து உயிரினங்களின் சமத்துவத்துக்கும், மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கும் மரியாதை அளிப்பது தொடர்பான அவரது ஆழமான செய்தி இன்றைய உலகிற்கு எப்போதுமே பொருத்தமானதாக உள்ளது.
மகாவீர் ஜெயந்தி நாளில், ஆன்மீக ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, உலகளாவிய இரக்கம் ஆகியவற்றைத் தழுவி, அவரது வாழ்க்கையிலிருந்தும், கொள்கைகளிலிருந்தும் நாம் வலிமையைப் பெறுவோம். நமது சமூகங்களிலும் அதற்கு அப்பாலும் சகிப்புத்தன்மை, புரிதல், அமைதி ஆகியவற்றை வளர்க்க அவரது ஞானம் நம்மை ஊக்குவிக்கட்டும்.”
இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
***
(Release ID: 2120416)
TS/PLM/AG/RR
(Release ID: 2120462)
Visitor Counter : 35