மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மாலத்தீவின் மாலேவில் நடைபெற்ற 13-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையேயான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது
Posted On:
21 FEB 2025 5:21PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில், மாலத்தீவின் மாலேவில் நடைபெற்ற 13-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வங்காள விரிகுடா நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி, மாலத்தீவு அரசின் மீன்வளம், பெருங்கடல் வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மீன்வள மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த மாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெற்றது.
மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது. வங்காள விரிகுடா பகுதியில் உள்ள நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்த இந்தியா உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105308
***
TS/SV/RJ/DL
(Release ID: 2105400)