குடியரசுத் தலைவர் செயலகம்
பிப்ரவரி 22 முதல் புதிய வடிவத்தில் காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்
Posted On:
08 FEB 2025 12:27PM by PIB Chennai
காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பிப்ரவரி 22, 2025 முதல் புதிய வடிவத்தில் நடைபெறும்.
குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 16, 2025 அன்று தொடக்க நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.
காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சியின் புதிய வடிவத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையின் பின்னணியில் ஒரு துடிப்பான காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை மக்கள் காணலாம். இந்த விழாவில் குடியரசு தலைவரின் மெய்க்காவலர்களின் குதிரைகள் மற்றும் துருப்புக்களின் கண்கவர் பயிற்சிகள், அணிவகுப்பு , பாண்ட் இசைக்குழுவின் இன்னிசை ஆகியவை இடம்பெறும்.
***
PKV/KV
(Release ID: 2100988)
Visitor Counter : 34