எஃகுத்துறை அமைச்சகம்
சிறப்பு பயன்பாட்டு எஃகுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் முதலீடு
Posted On:
07 FEB 2025 1:11PM by PIB Chennai
நாட்டில் மதிப்பு கூட்டப்பட்ட எஃகு உற்பத்தியை அதிகரிக்க முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் சிறப்பு பயன்பாட்டு எஃகுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. எஃகுத்தொழில் என்பது ஒழுங்குமுறை நீக்கப்பட்ட துறையாகும். முதலீடு, உற்பத்தி போன்ற முடிவுகள் தொழில்துறையின் தொழில்நுட்ப-வணிகக் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ. 27,106 கோடி முதலீட்டிற்கு உறுதியளித்துள்ளன. இதில் டிசம்பர் 2024 வரை ரூ.18,848 கோடி எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 2024 வரை சிறப்பு எஃகு உற்பத்தி 1,258,000 டன்கள்.
இந்தத் தகவலை எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2100579)
TS/SMB/AG/RR
(Release ID: 2100713)
Visitor Counter : 22