ஜல்சக்தி அமைச்சகம்
எஸ்.பி.எம் அகாடமியின் புலனப் பதிப்பை அறிமுகப்படுத்துகிறது, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை
Posted On:
31 JAN 2025 10:52AM by PIB Chennai
ஊரகத் தூய்மை ஆய்வு (எஸ்.எஸ்.ஜி) 2024 இன் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்யவும், பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் வருடாந்திர அமலாக்கத் திட்டம் 2025-26க்கான உத்திசார் திட்டமிடல் குறித்து விவாதிக்கவும் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையானது, 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கூட்டம் எஸ்.எஸ்.ஜி ஆய்வு முடிவுகளின் முக்கிய பரிந்துரைகள் பற்றிய நேர்மையான விவாதங்களை எளிதாக்கியது. மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகள் உட்பட முழுமையான தூய்மையை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஆதார அடிப்படையிலான அணுகுமுறையையும் உறுதி செய்கிறது.
இந்தக் கூட்டத்தின்போது எஸ்.பி.எம் அகாடமியின் புலன பதிப்பு (வாட்ஸ் அப்) அறிமுகப்படுத்தப்பட்டது. இது பயிற்சி உள்ளடக்கத்துடன் அணுகல் மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு புதுமையான முயற்சியாகும். புதுப்பிக்கப்பட்ட எஸ்.பி.எம் அகாடமி பாடத்திட்டம், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. கற்றலை மிகவும் நடைமுறைக்குரியதாகவும், மாறும் மற்றும் பரவலாகக் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு ஊடாடும் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
புலனம் அடிப்படையிலான மாதிரியில் அனைத்து பயனர்களும் ஒலி, ஒளி வடிவிலும், படங்கள் வடிவிலும் பாடநெறி தொடர்பான நினைவூட்டல்களைப் பெறுகிறார்கள், இது கற்றல் செயல்முறையை மிகவும் ஈடுபாட்டுடன் மாற்றுகிறது. இந்த முன்முயற்சி அனைத்து பயனர்களும் குடிமக்களும் தங்கள் பயிற்சியை முடிப்பதற்கான விருப்பத்தை உறுதி செய்கிறது. இதற்காக 1800 1800 404 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது இந்த எண்ணிற்கு புலனம் வாயிலாக செய்திகளை அனுப்பலாம்.
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த தளமானது, 100க்கு 50 மதிப்பெண்களைப் பெற்றால் பயிற்சி சான்றிதழைப் பெறவும் பயனர்களை அனுமதிக்கிறது. பாடநெறி முடிந்ததும், பயனர்கள் தங்கள் சான்றிதழ்களை நிகழ்நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தி, பயிற்சி பெற்ற தூய்மை பாரத இயக்கத்தின் மனிதவளத்தின் சரிபார்க்கப்பட்ட தரவுத்தளமாக மாறுவதற்கான ஆற்றலையும் எஸ்.பி.எம் அகாடமி கொண்டுள்ளது.
இந்த முயற்சியை குறித்து பேசிய குடிநீர் மற்றும் துப்புரவு துறை செயலாளர் திரு அசோக் கே.கே மீனா, புலன சேவையின் அறிமுகம், அடிமட்ட திறன் மேம்பாட்டிற்காக டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097805
TS/BR/KR
(Release ID: 2097805)
***
(Release ID: 2097871)