தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

'மங்கலான எல்லைகள்: நவீன திரைப்பட வரவேற்பை மக்கள் தொடர்பு எவ்வாறு வடிவமைக்கிறது' என்ற தலைப்பில் 55 வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் குழு விவாதம்

"சினிமாவில் உண்மைக்கும்  உணர்தலுக்கும்  இடையிலான கோடுகளை மங்கலாக்குதல்" என்ற தலைப்பிலான ஒரு விவாத அமர்வில், பார்வையாளர்களின் கருத்து, சினிமாவின் நம்பகத்தன்மை ஆகியவற்றில்  வளர்ந்து வரும் மக்கள் தொடர்பு பங்கு குறித்து விவாதிக்க தொழில்துறை நிபுணர்களை 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒன்றிணைத்தது. புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜெயப்பிரத் தேசாய் தலைமையில் நடைபெற்ற இந்தக்  குழுவிவாதத்தில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவருமான ரவி கொட்டாரக்கரா; பிரபல இயக்குநர் சங்கர் ராமகிருஷ்ணன்; மூத்த திரைப்பட பத்திரிகையாளர் ஹிமேஷ் மன்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி பார்வையாளர்களின் கருத்துக்களால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில். விளம்பர உத்திகள் பெரும்பாலும் சினிமாவின் சாராம்சத்தை மறைத்து, உள்ளடக்கத்தை விட கட்டமைக்கப்பட்ட படத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதால், உண்மைக்கும் உணர்வுக்கும் இடையிலான கோடுகள் அதிகம் மங்கலாகி வருவதைக் காண முடிகிறது.

ஒரு காலத்தில் உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திய மக்கள் தொடர்பு பிரிவு  எவ்வாறு தங்கள் விருப்பம்போல் தகவமைத்தலுக்கு மாறியுள்ளது என்பதை ஹிமேஷ் மன்கட் எடுத்துரைத்தார். "திரைப்படங்கள் பெரும்பாலும் உத்தி சார்ந்த  பிரச்சாரங்கள் மூலம் மிகவும் சாதகமாக சித்தரிக்கப்படுகின்றன. பார்வையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன. நம்பகத்தன்மையை அழிக்கின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.  நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், "மக்கள் தொடர்பு பிரிவு உந்துதல் விவரிப்புகளைப் பொருட்படுத்தாமல், பார்வையாளர்கள் ஒரு படத்தின் வெற்றியின் இறுதி நீதிபதிகளாக உள்ளனர்" என்று அவர் கூறினார்.

 டிஜிட்டல் தளங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை ரவி கொட்டாரக்கரா எடுத்துரைத்தார், அங்கு விமர்சனங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களின் கருத்துக்கள் ஒரு படத்தை விரைவாக மேம்படுத்தலாம் அல்லது உடைக்கலாம். "ஒரு வலுவான படம் கூட முன்கூட்டியே, தவறான வழிகாட்டுதல் விமர்சனங்களால் தடுமாறக்கூடும்" என்று அவர் கூறினார். ஓடிடி தளங்கள் விருப்பங்களை எவ்வாறு கையாளுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திரைப்பட வரவேற்பை வடிவமைப்பதில் கலாச்சார உணர்திறன் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கை வலியுறுத்திய  சங்கர் ராமகிருஷ்ணன் கேரள திரையுலகின் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். மக்கள் தொடர்பு பிரிவு குறைவாக அறியப்பட்ட திரைப்படங்களை உயர்த்த முடியும். போட்டியாளர்களுக்கு எதிராக ஆயுதமாகவும் இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்,

மக்கள் தொடர்பு பிரிவு ஓர் அத்தியாவசிய கருவி என்றாலும், அதன் தவறான பயன்பாடு திரைப்படத் துறையின் நம்பகத்தன்மையை அழிக்கக்கூடும் என்பதை குழு உறுப்பினர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டனர். மக்கள் தொடர்பு பிரிவு சினிமாவின் கலைத்திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை விட ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்த அமர்வில் செயல்பாட்டு நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன.  "மக்கள் தொடர்பு பிரிவு என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள். இது ஒரு படத்தின் வீச்சை அதிகரிக்க முடியும் என்றாலும், மிகைப்படுத்துவது நம்பகத்தன்மைக்கு நெருக்கடியையும்  ஏற்படுத்தும், இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று ஜெயப்பிரத் தேசாய் நிறைவுரையில் கூறினார்.

***

 

(Release ID: 2078079)
AD/SMB/KR

iffi reel

(Release ID: 2078341)