பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை அறிவிப்பு

Posted On: 12 OCT 2024 5:09PM by PIB Chennai

 

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குஜராத்தின் மெஹ்சானாவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மிகவும் கவலை அளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி @narendramodi"

"குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்."

*****

PLM/ KV

 

 

 



(Release ID: 2064404) Visitor Counter : 22