தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தேசிய மனித உரிமை ஆணையத்தின் இரண்டு வார ஆன்லைன் குறுகிய கால பயிற்சி நிறைவு

Posted On: 03 OCT 2024 2:10PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வார ஆன்லைன் குறுகிய கால பயிற்சித் திட்டம் நிறைவடைந்தது. இது செப்டம்பர் 17, 2024 அன்று தொடங்கியது. தொலைதூர பகுதிகள் உட்பட, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 77 மாணவர்கள் இதை முடித்தனர். தில்லியில் பயணம் அல்லது தங்குமிடம் தொடர்பான எந்த செலவும் இல்லாமல், மாணவர்கள் பங்கேற்க ஆன்லைன் வடிவம் உதவியது.

நிறைவு விழாவில் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் தலைவர் திருமதி விஜயபாரதி சயானி, சமூகத்தின் நலிந்த பிரிவினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், மனித உரிமை பாதுகாவலர்களாக பரிணமிக்க பயிற்சியாளர்களை ஊக்குவித்தார். பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில், முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக, இதுபோன்ற இன்டர்ன்ஷிப் திட்டங்களை ஏற்பாடு செய்ய ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடித்ததற்காக பயிற்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளர் திரு. பரத் லால், பயிற்சியாளர்கள் இன்டர்ன்ஷிப்பின் போது பெற்ற அறிவை உள்வாங்கி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அதை சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் தன்னலமற்ற சேவைக்காக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சிறந்த மனித உரிமை பாதுகாவலர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகளிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று பயிற்சி மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். பயிற்சியின்போது கற்றுக்கொண்ட மனித உரிமைகள் மதிப்புகள் மற்றும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வ மாற்றங்களை பிரதிபலிக்குமாறு, பங்கேற்பாளர்களை அவர் ஊக்குவித்தார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு தேவேந்திர குமார் நிம், இந்த அமர்வின் போது, இன்டர்ன்ஷிப் அறிக்கையை வழங்கியதுடன், புத்தக விமர்சனம், குழு ஆராய்ச்சி, திட்ட விளக்கம் மற்றும் உணர்ச்சிகரமான பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தார். தேசிய மனித உரிமை ஆணைய இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் வீரேந்தர் சிங் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.

என்.எச்.ஆர்.சி, இந்தியா முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்த, ஆணையம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் இன்டர்ன்ஷிப் திட்டங்களை நடத்துகிறது. இந்த திட்டங்கள் மூலம், அடுத்த தலைமுறை மனித உரிமை பாதுகாவலர்களுக்கு, கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதில் NHRC தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

***

MM/AG/KR/DL



(Release ID: 2061579) Visitor Counter : 19