கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐபிசி 2-வது சர்வதேச பௌத்த ஊடக மாநாட்டை சர்வதேச பௌத்த கூட்டமைப்பு நடத்தியது

प्रविष्टि तिथि: 11 SEP 2024 6:19PM by PIB Chennai

சர்வதேச பௌத்த கூட்டமைப்பு, விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை  ஆகியவை மோதல் தவிர்ப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கான கவனத்துடன் தொடர்பாடல் என்ற கருப்பொருளில் 2-வது சர்வதேச பௌத்த ஊடக மாநாட்டை நடத்தின. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் திரு பாய்சுங் பூட்டியா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விவேகானந்தா அறக்கட்டளைத் தலைவர் குருமூர்த்தி, ஐபிசி பொதுச் செயலாளர் ஜாங்சுக் சோய்டன், விஐஎஃப் இயக்குநர் டாக்டர் அரவிந்த் குப்தா, மூன்று முறை கிராமி விருது பெற்ற திரு ரிக்கி கெஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கினர்.

சிறப்பு விருந்தினர் திரு பாய்சுங் பூட்டியா, புத்த மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று கூறினார். புத்தரின் போதனைகள் அமைதி மற்றும் தியாகம் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்வதில் புத்த மதத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், புத்த மதத்தின் செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் திரு பூட்டியா கூறினார்.

செய்தியாளர்களுடன் உரையாடிய ஐபிசி தலைமை இயக்குநர் திரு அபிஜித் ஹால்தர், இந்த நிகழ்ச்சிக்கு ஊடகங்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்ததாகவும், ஐபிசி தனது அடுத்த மாநாட்டை பெரிய அளவில் ஏற்பாடு செய்யும் என்றும் சுட்டிக்காட்டினார்.

---

PKV/KPG/KV

 

 


(रिलीज़ आईडी: 2054135) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Urdu , हिन्दी