எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய இஸ்பத் நிறுவனத்தை புனரமைக்க, கூட்டு முயற்சிகளுக்கு இதன் தலைமை நிர்வாக இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 AUG 2024 10:36AM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையின் கார்ப்பரேட் நிறுவனமான தேசிய இஸ்பத் நிறுவனத்தின் பல்வேறு தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் சந்திப்பு 2024 ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் தற்போதைய நிலைப்பற்றி தலைமை நிர்வாக இயக்குநர் திரு அதுல் பட் எடுத்துரைத்தார். இந்த நிறுவனம் புனரமைக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாகத்துடன் சேர்ந்து அனைத்து ஊழியர்களும், சங்கங்களும், நிர்வாகிகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். தேசிய இஸ்பத் நிறுவனத்தின் நிதிநிலையை தொடர்ந்து மேம்படுத்தும் விரிவடைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உற்பத்தியை அதிகரித்தல், செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் தேசிய இஸ்பத் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) திரு ஏ.கே.பக்சி, இயக்குநர் (ஊழியர் நலன்) திரு எஸ்.சி.பாண்டே, இயக்குநர் (நிதி) திரு சி.எச்.எஸ்.ஆர்.வி.ஜி.கே. கணேஷ், இயக்குநர் (வணிகம்) திரு ஜி.வி.என்.பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2049626)
SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2049657)
आगंतुक पटल : 62