தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கிருஷ்ண குமார் யாதவ் அகமதாபாத் ஜி.பி.ஓவில் தேசியக் கொடியை ஏற்றினார்

प्रविष्टि तिथि: 15 AUG 2024 1:30PM by PIB Chennai

அஞ்சல்துறை  78 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. வடக்கு குஜராத் பிராந்திய அஞ்சல் துறை தலைவர் திரு. கிருஷ்ண குமார் யாதவ், அகமதாபாத் ஜிபிஓவில் தேசியக் கொடியை ஏற்றி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தபால் ஊழியர்களை கௌரவித்தார். வடக்கு குஜராத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது, மேலும் பல்வேறு அரசாங்க திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டாக் சௌபால் ஏற்பாடு செய்யப்பட்டது.

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ கிருஷ்ண குமார் யாதவ் கூறுகையில், சுதந்திர தினம் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது பெருமை மற்றும் கவுரவத்தின் அடையாளமாகும். தேசியக் கொடி தேசிய ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை உள்ளடக்கியது என்றும் அவர் வலியுறுத்தினார். 'ஹர் கர் திரங்கா' முன்முயற்சியின் கீழ், அஞ்சல் துறை ஒவ்வொரு வீட்டிற்கும் தேசியக் கொடியை விநியோகிப்பதன் மூலம் தேசபக்தியை ஊக்குவித்துள்ளது. நமது துறையில் நேர்மையாக பணியாற்றுவதன் மூலமும், மக்களுக்கு உதவுவதன் மூலமும், நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் பங்களிக்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். சுதந்திர தினம் நமது சுதந்திர உணர்வைப் புதுப்பிக்கவும், நமது உரிமைகளுடன் நமது கடமைகளையும் அறிந்திருக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தும் அதே வேளையில், சுதந்திரத்தின் மதிப்புகளை அங்கீகரிப்பதற்கும், சிறந்த தனிநபர்களின் தியாகங்களை நினைவில் கொள்வதற்கும் இது ஒரு நேரம் என்று திரு யாதவ் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045572

-----------

MM/RJ/KV


(रिलीज़ आईडी: 2045609) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu