குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆகஸ்ட் 16-17 தேதிகளில் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 15 AUG 2024 11:46AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 ஆகஸ்ட் 16-17 ஆகிய தேதிகளில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

திரு தன்கர் ஆகஸ்ட் 16 அன்று ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்திற்கு வருகை தருகிறார்.

ஆகஸ்ட் 17 அன்று, திரு தன்கர் ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் உள்ள அக்ஷரா வித்யாலயா வளாகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம், ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை மற்றும் முப்பாவரப்பு அறக்கட்டளை ஆகியவற்றைப் பார்வையிடுகிறார்.

தமது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 23வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு திரு தன்கர் தலைமை தாங்குவார்..

*****

PKV/ KV

 

 



(Release ID: 2045568) Visitor Counter : 14


Read this release in: Telugu , English , Urdu , Hindi