பாதுகாப்பு அமைச்சகம்

ஒடிசா கடற்கரையில் சுகோய்-30 எம்.கே விமானத்தில் இருந்து 'கௌரவ்' தொலைதூர வெடிகுண்டு சோதனையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக நடத்தியது.

Posted On: 13 AUG 2024 8:20PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), இந்திய விமானப்படையின் சுகோய் -30 எம்.கே விமானத்திலிருந்து கௌரவ்  தொலைதூர கிளைட் வெடிகுண்டின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசா கடற்பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கௌரவ் என்பது வானில் இருந்து ஏவப்படும் 1,000 கிலோ ரக கிளைட் வெடிகுண்டு ஆகும், இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. ஏவப்பட்ட பிறகு, ஐ.என்.எஸ் மற்றும் ஜி.பி.எஸ் தரவுகளின் கலவையுடன் மிகவும் துல்லியமான கலப்பின வழிசெலுத்தல் திட்டத்தைப் பயன்படுத்தி கிளைட் வெடிகுண்டு இலக்கை நோக்கி நகர்கிறது. ஹைதராபாத்தில் உள்ள இமாரத் (ஆர்.சி.ஐ) ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே கௌரவ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விமான சோதனையின் போது, வெடிகுண்டு துல்லியமாக இலக்கைத் தாக்கியது. இந்த விமானத்தை டி.ஆர்.டி.ஓவின் மூத்த விஞ்ஞானிகள் கண்காணித்தனர். அதானி டிபென்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ், டெவலப்மென்ட் கம் புரொடக்ஷன் பார்ட்னர்ஸ் ஆகியவையும் விமான சோதனையில் பங்கேற்றன.

இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய விமானப்படை மற்றும் தொழில்துறையை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். ஆயுதப்படைகளின் திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் நாட்டின் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.

சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ குழுவை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் பாராட்டினார்.

********* 

BR/KV



(Release ID: 2045072) Visitor Counter : 10