பாதுகாப்பு அமைச்சகம்

மலேசியாவில் நடைபெற்ற உதார சக்தி பயிற்சியில் வெற்றிகரமாக பங்கேற்ற பின், இந்திய விமானப்படையின் குழு இந்தியா திரும்பியது

Posted On: 10 AUG 2024 4:15PM by PIB Chennai

மலேசியாவில் நடைபெற்ற உதார சக்தி - 2024 பயிற்சியில் வெற்றிகரமாக பங்கேற்ற இந்திய விமானப்படையின் குழு, இன்று (10 ஆகஸ்ட் 24) இந்தியா திரும்பியது. மலேசியாவின் குவாந்தானில் 2024 ஆகஸ்ட் 05 முதல் 09-ம் தேதி வரை ராயல் மலேசிய விமானப்படையுடன் (RMAF) இணைந்து இந்தக் கூட்டு விமானப் பயிற்சி நடத்தப்பட்டது. சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களுடன் இந்திய விமானப்படை இதில் பங்கேற்றது.

பயிற்சியின் போது, இந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள் வான் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இரு விமானப் படைகளின் குழுவினரும் ஒருவருக்கொருவர் செயல்பாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள இது உதவியது.

செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில், இரு விமானப்படைகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் பராமரிப்பு நடைமுறைகளை பரிமாறிக் கொண்டனர்.

****

PLM/DL



(Release ID: 2044085) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Marathi