புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரிய ஆற்றல் பயன்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2024 3:43PM by PIB Chennai

நிதி ஆயோக் உருவாக்கிய "இந்தியா எனர்ஜி செக்யூரிட்டீஸ் காட்சிகள் 2047" கருவியின் படி, 2047 ஆம் ஆண்டு வரை சூரிய சக்தித் திறனின் பங்கு 1860 ஜிகாவாட் மொத்த நிறுவப்பட்ட திறனில் சுமார் 46% என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் சூரிய தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, 2050 ஆம் ஆண்டளவில் சூரிய பூங்காக்களின் கீழ் திட்டமிடப்பட்ட நிலப் பயன்பாட்டை மதிப்பிடுவது கடினம்.

 

சூரிய சக்தி திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன. சூரிய ஒளி-மின்னழுத்த தொகுதிகள் அல்லது பேனல்கள் அல்லது செல்களைப் பயன்படுத்திய பிறகு உருவாகும் மின்னணு கழிவுகளை நிர்வகிக்க சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022 ஐ அறிவித்தது. இது 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

மேலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ளபடி சூரிய ஒளி போட்டோவோல்டிக் மாட்யூல்கள் அல்லது பேனல்கள் அல்லது செல்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2042616)


(வெளியீட்டு அடையாள எண்: 2042943) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi