குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மேம்பாடு
Posted On:
01 AUG 2024 5:03PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கிடையாது வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக,. “உத்யம் பதிவு" 01.07.2020 அன்று தொடங்கப்பட்டது. முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்களை முறையான வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக 11.01.2023 அன்று உத்யம் உதவித் தளம் தொடங்கப்பட்டது. கடன் நோக்கத்திற்காக 02.07.2021 முதல் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக சேர்த்தல். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலை உயர்ந்தால் வரி அல்லாத சலுகைகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
IR/RS/DL
(Release ID: 2040442)
Visitor Counter : 50