நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் விலை கண்காணிப்பு நடைமுறை 4.0 செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார்

Posted On: 01 AUG 2024 3:06PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, 2024ஆகஸ்ட் 1முதல் விலை கண்காணிப்பின் கீழ் 16 கூடுதல் பொருட்களை சேர்த்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இன்று  விலை கண்காணிப்பு நடைமுறை 4.0 செல:போன் செயலியை அறிமுகப்படுத்தும் போது தெரிவித்தார். ஏற்கனவே 22 பொருட்கள் தினசரி விலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி 38 பொருட்களின் விலை கண்காணிக்கப்படும்.

34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 550 மையங்களில் தினசரி விலைகளை நுகர்வோர் விவகாரங்கள் துறை கண்காணித்து வருகிறது. நுகர்வோர் விலக்குக் குறியீடு தொடர்பான அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பகுப்பாய்வாளர்களுக்கான கொள்கை முடிவுகளுக்கான முன்கூட்டிய உள்ளீடுகளை, இத்துறையால் கண்காணிக்கப்படும் விலைத் தரவுகள் வழங்குகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு, ரவை, மைதா, கடலை மாவு, நெய், வெண்ணெய், கத்தரி, முட்டை, கருப்பு மிளகு, மல்லி, சீரகம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் வாழைப்பழம் ஆகிய 16 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தினசரி விலை கண்காணிப்பின் கீழ் உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை அதிகரித்திருப்பது, உணவுப் பொருட்களின் விலை நிலையற்ற விலையை நிலைப்படுத்தவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கொள்கை தலையீடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும். அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி மேலும் பிரதிபலிக்கிறது.

சமீப காலமாக உணவுப் பொருட்களின் விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாரத கடலைப் பருப்பு கிலோ ரூ.60-க்கு வழங்குவதும் இதில் அடங்கும்; சில்லறை நுகர்வோருக்கு பாரத் ஆட்டா கிலோ ரூ.27.50 ஆகவும், பாரத் அரிசி கிலோ ரூ.29 ஆகவும் உள்ளது. தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் 29 ஜூலை 2024 முதல் சில்லறை, நுகர்வோருக்கு கிலோ ரூ.60-க்கு தக்காளி சில்லறை விற்பனையை தொடங்கியுள்ளது. பதுக்கலைத் தடுக்க, துவரம் பருப்பு மற்றும் தேசி கொண்டைக்கடலைக்கு 21 ஜூன் 2024 முதல் 30 செப்டம்பர் 2024 வரை இருப்பு வரம்புகள் விதிக்கப்படுகின்றன. துவரம் பருப்பு, ளுந்து, மசூர், மஞ்சள் பட்டாணி மற்றும் நாட்டு கொண்டைக்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளை வரி ஏதுமின்றி இறக்குமதி செய்து உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்காகவும் பற்றாக்குறை மாதங்களில் விடுவிப்பதற்காகவும் 5 லட்சம் மெட்ரிக் டன்  இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் எடுக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், இந்த ஆண்டு (2024-25) காரீப் பருவத்தில் விதைக்கப்பட்ட பருப்பு ரகங்களின் பரப்பில் வலுவான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் சந்தையை உறுதிப்படுத்தியுள்ளன, மேலும் முக்கிய மண்டிகளில் கொண்டைக்கடலை, துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் 4% வரை குறைந்துள்ளன. பருப்பு வகைகளின் அகில இந்திய சராசரி சில்லறை விலைகள் வாராந்திர அடிப்படையில் குறைந்து வருவதால், மண்டி விலைகளில் வீழ்ச்சியடைந்த போக்கு, இப்போது சமீபத்திய வாரங்களில் சில்லறை விலைகளில் பிரதிபலிக்கிறது.

----

MM/KPG/DL

 



(Release ID: 2040439) Visitor Counter : 21