வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன

Posted On: 01 AUG 2024 1:18PM by PIB Chennai

மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் சமர்ப்பித்த திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், 22.07.2024 நிலவரப்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 118.64 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில் 114.33 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில் 85.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளுக்கு மத்திய அரசு ரூ.2.00 லட்சம் கோடி (தோராயமாக) நிதியுதவி வழங்குகிறது. இதில் ரூ.1.64 லட்சம் கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6,80,347 வீடுகள்  கட்டுவதற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டு, 6,63,430 வீடுகளுக்கு  அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளன. இதில் 5,70,294 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் ரூ. 11,185,30 கோடி  நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 10,135.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***


IR/RS/KR/DL



(Release ID: 2040403) Visitor Counter : 24