தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக் கருத்தரங்கை இந்தியா நடத்தியது

Posted On: 31 JUL 2024 5:06PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்தி நகரில்  உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது கருத்தரங்கு ஜூலை 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்களாதேஷ், இந்தியா. மாலத்தீவு, மொரிஷியஸ், செஷல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலாளரும் பங்கேற்றனர். இணையப் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தைப்  பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் புதுமையான அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039692

***

IR/KPG/DL



(Release ID: 2039836) Visitor Counter : 24