கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபேம் திட்டத்தின் கீழ் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2024 3:38PM by PIB Chennai

ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. ஊக்கத்தொகை / சலுகை நுகர்வோருக்கு (வாங்குபவர்கள் / இறுதி பயனர்கள்) மின்சார வாகனங்களின் கொள்முதல் விலையில் முன்கூட்டிய குறைப்பு வடிவத்தில் வழங்கப்படுகிறது, இது இந்திய அரசால் உற்பத்தியாளர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படுகிறது.

ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களின் கொள்முதல் விலையில் முன்கூட்டியே குறைப்பு வடிவில் வாகனத்தை வாங்கும் நேரத்தில் ஊக்கத்தொகை / மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (01.04.2019 முதல் 31.03.2024 வரை) உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் கோரிய ஊக்கத்தொகைக்காக மானியம் வழங்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*** 

PKV/KV/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2037622) வருகையாளர் எண்ணிக்கை : 107
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu , Kannada