பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தில் தீர்வு காணப்பட்ட சில குறைகள் குறித்த விவரம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2024 5:27PM by PIB Chennai

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, அதன் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதியர்களின் குறைகளை சரியான நேரத்திலும் சிறந்த முறையிலும் தீர்ப்பதற்கான ஒரு மாத கால இயக்கத்தை 2024 ஜூலை 1 தொடங்கி 31 வரை நடத்துகிறது. இந்த இயக்கத்தை மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஜூலை 1 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கம் தற்போது வேகம் பெற்றுள்ளது. இதில் வெற்றிகரமாக தீர்வுகாணப்பட்ட சில முக்கிய நேர்வுகள் வருமாறு:

*சாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) படைப்பிரிவைச் சேர்ந்த மறைந்த பெமா தமாங்கின் குடும்பத்தினருக்கு 2010-ம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இது தொடர்பான குறைகள் தீர்வுகாணப்பட்டு, ரூ.20.92 லட்சம் நிலுவைத் தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

*திருமதி ஃபுல்மதி தேவி என்பவர் 2011-ல் தனது கணவரை இழந்தார், அவருக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், 6 மற்றும் 7-வது மத்திய ஓய்வூதிய அளவின்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்த சிறப்பு இயக்கத்தின் போது இது தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டு அவருக்கு ஊதியமும் ரூ.16.30 லட்சம் நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டதுடன் ஓய்வூதியத்தில் திருத்தமும் செய்யப்பட்டது.

*ரயில்வே அமைச்சகத்தில் இருந்து குடும்ப ஓய்வூதியம் பெற்ற திருமதி சுசீலா தேவியின் குறைகள் 7 ஆண்டுகளுக்குப் பின் தீர்க்கப்பட்டு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

* ராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த ராம் கிருபால் சிங்கின் குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் நிலுவைத் தொகையுடன் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

----

SMB/PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2031110) வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu , Kannada