குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தின நிகழ்ச்சிக்கு 2024 ஜூன் 27 அன்று மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி தலைமை வகிக்கவுள்ளார்
Posted On:
25 JUN 2024 6:24PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி உத்யாமி பாரத் என்ற குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தின நிகழ்ச்சிக்கு 2024 ஜூன் 27 அன்று தலைமை வகிக்கவுள்ளர். புதுதில்லியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இந்த தொழில் துறையைச் சார்ந்தவர்களை இணைக்கும். இத்துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இந்த நிகழ்வில். குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பாக நான்கு அமர்வுகள் இடம்பெறும்.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ஷோபா கரந்தலஜே, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்துக்கும், கோவா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக் கொள்ளப்படும்.
***
PLM/AG/DL
(Release ID: 2028613)