சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் பெருந்திரள் யோகா நிகழ்வு நடைபெற்றது
Posted On:
21 JUN 2024 6:26PM by PIB Chennai
10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் கூட்டான யோகா நிகழ்ச்சிகள் மூலம் உடல் நலன் காக்க உறுதியேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைவருக்குமான யோகா என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10,000 மாற்றுத்திறனாளிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் உள்ளோருக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய நிறுவனம் அனைவரையும் உள்ளடக்கிய யோகா என்ற மையப்பொருளுடன் சிறப்புப் பள்ளிகளில் தொடர்ச்சியான ஒரு நாள் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
புதுதில்லியில் உள்ள உடல் திறன் குறைபாடு உடையோருக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்திலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் சி பி எல் வர்மா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கானது மட்டுமல்ல என்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கான சக்திவாய்ந்த வழிமுறை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுடன் யோகா பயிற்சியில் ஈடுபடும் வாய்ப்பு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பார்வைத் திறன் குறைபாடுடைய நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இங்கு தில்லி, கேரளா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2027668
***
SMB/KPG/DL
(Release ID: 2027741)