குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஹைதராபாத் பாரத் பயோடெக் வளாகத்தில் குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றிய உரை

Posted On: 27 APR 2024 10:01PM by PIB Chennai

மாண்புமிகு தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி நிர்வாகி மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, இப்போது இந்த அரசியலமைப்பு பதவியை வகிக்கும் அனுபவம் கொண்ட ஒரு மனிதர் ஆவார்.

பத்ம விருதுகள் மிக உயர்ந்த நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளன. அவை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை, பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு பத்ம விருது கிடைக்கும்போது, நீங்கள் அதை எதிர்பார்ப்பதே இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். 

1.3 பில்லியன் மக்களை கவனித்துக்கொள்வதில் நீங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள், எங்களை எல்லா வகையிலும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நாடு தனது சொந்த பிரச்சினையை கையாளும் போது, கோவாக்சின் மைத்ரி திட்டத்தின் மூலம் 100 நாடுகளுக்கு கைகொடுத்தது.

சுமார் 100 நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்கினோம். இப்போது உண்மையான விஷயத்திற்கு வருகிறேன். இது எப்படி கொண்டு வரப்பட்டது? ஆராய்ச்சி, மேம்பாடு, கண்டுபிடிப்பு மூலமாக கிடைத்தது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு எந்தவொரு பொருளாதாரத்தின் இறுதி பலமாகும். எந்தவொரு தேசத்தின் இறுதி பலமும் அவைதான். ஒரு குறிப்பிட்ட மருந்தை உருவாக்குவது, அதில் புதுமையை உருவாக்குவது, அதுவே மனிதகுலத்திற்கு நீங்கள் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய உதவி. இந்த நிறுவனம் தனித்து நிற்கிறது. 

உங்கள் மதிப்புமிக்க நிறுவனம் உண்மையிலேயே புதுமை, ஆராய்ச்சி, சேவை மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒரு அளவுகோலை அமைத்துள்ளது. நீங்கள் வணிக ஆர்வத்தால் இயக்கப்படவில்லை. நிச்சயமாக, ஒவ்வொரு பொறிமுறையும் நிலையானதாக இருக்க வேண்டும்.

நாம் மனதைப் பற்றிப் பேசுகிறோம். எப்போதாவது இதயத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் அரிதாகவே நாம் ஆன்மாவைப் பற்றி பேசுகிறோம்.

இப்போது ஆன்மாவும் ஆன்மீகமும் ஒரு மனிதனை வரையறுக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, நமது அளவிலான ஒரு நாடு சமீபத்திய ஆண்டுகளில், கொள்கை முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களைக் கண்டுள்ளது.

நாட்டில் உள்ள சுகாதாரத் திட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன். அதன் தாக்கம்  உலகின் எந்த திட்டத்திற்கும் அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

நமது பண்டைய வேதங்களை, குறிப்பாக அத்ருவவேதத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்தின் மீதும், அவை சுட்டிக்காட்டியுள்ள சூழ்நிலைகளின் மீதும் கவனம் செலுத்தப்படுவதை நீங்கள் காணலாம். இப்போது இது போன்ற நிறுவனங்கள் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, தடுப்பு, முன்னெச்சரிக்கை ஆகியவற்றைக் கொண்டுவர வேலை செய்யலாம். பொத்தானை அழுத்தி மருத்துவரை வரவழைக்க வேண்டிய இயந்திரம் இருக்கும்போது நாம் பீதி அடைய வேண்டாம்.

 அந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். அது தவிர்க்கத்தக்கது. இது போன்ற ஒரு நிறுவனம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், கிராமப்புற, 2, 3-ஆம் நிலை நகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் சரியான தகவல்கள், சரியான அறிவைப் பரப்புவதை நிச்சயமாக கவனித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

 உங்கள் சிறப்பான பங்களிப்பு மற்றொரு காரணத்திற்காகவும் எங்களை பெருமைப்படுத்தியது. அதுதான் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்ப ஊடுருவல், டிஜிட்டல் ஊடுருவல். 

 விண்வெளியைப் பற்றி பேசலாம். சந்திரயான் 3 நிலவில் யாரும் தரையிறங்காத பகுதியில் தரையிறங்கியது. ஆகஸ்ட் 23 என்பது இப்போது விண்வெளி நாளாக மாறியுள்ளது.

 திரங்கா மற்றும் சிவ சக்தி புள்ளிகள் சந்திரனின் மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம், உங்களைப் போன்ற ஒரு அமைப்பான இஸ்ரோ அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுதான். இப்போது இந்த நாடு வளர்ந்த நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. 

மனிதநேயத்தின் ஒருமித்த கருத்தால் மக்கள் உந்தப்படும் ஒரு இடத்திற்கு வந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்களுக்கும், மெய்நிகர் மூலமாக கலந்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். 

மிக்க நன்றி.

************** 

ANU/AD/BR/KV

 



(Release ID: 2019033) Visitor Counter : 35


Read this release in: Odia , English , Urdu , Hindi , Telugu