குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசுத் துணைத்தலைவர் பிப்ரவரி 26, 2024 அன்று மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலுக்கு பயணம் செய்கிறார்

Posted On: 24 FEB 2024 1:51PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024 பிப்ரவரி 26 அன்று மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின்போது, மிசோரம் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்.

குடியரசுத் துணைத்தலைவர் தனது பயணத்தின்போது அய்ஸ்வாலில் நடைபெறும் ஒன்பதாவது மிசோரம் சட்டப்பேரவையில் உரையாற்றுவார்.

தனது ஒருநாள் சுற்றுப்பயணத்தின்போது, திரு. தன்கர் அய்ஸ்வாலில் உள்ள ராஜ்பவனுக்கும் செல்கிறார்.

*******

AD/BS/DL



(Release ID: 2008620) Visitor Counter : 56