உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

'ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான தொழில் நிறுவனங்கள் அமைப்பு 2024’- புதுமைகள் மற்றும் ஒத்துழைப்புகளை மையக் கருத்தாகக் கொண்டிருந்தது

Posted On: 16 FEB 2024 11:49AM by PIB Chennai

ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள் அமைப்பு 2024 நிகழ்வு, உணவுப் பதப்படுத்துதலின் பல்வேறு அம்சங்களில் புதுமைகள், ஒத்துழைப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை உணவுப் பதப்படுத்தும் களத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை, நிறுவப்பட்ட உணவு வணிகங்களாக மாற்றுவதற்கான முக்கிய செயல்பாடுகள்  என்ற செய்தியுடன் நிறைவடைந்தது.

புதுதில்லியில் 2024 பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வை மத்திய உணவு பதனத் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புத்தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் உட்பட 250-க்கும் அதிகமானோர்  கலந்துகொண்டனர். நிகழ்வின்  ஒரு பகுதியாக நடந்த அமர்வுகளின் போது, நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் பங்கு, புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த முயற்சி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்துப் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் பற்றிய புதிய நுண்ணறிவுகள், எந்தவொரு வணிகத்திலும் நிதித் திட்டமிடலில் தாராள பணப்புழக்கத்தின் முக்கியத்துவம், சரியான பணப்புழக்க மேலாண்மை ஆகியவற்றில் பல்வேறு உதவிக்குறிப்புகள் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

***

 ANU/SMB/BS/RS/KV



(Release ID: 2006550) Visitor Counter : 79


Read this release in: English , Urdu , Hindi , Telugu