பிரதமர் அலுவலகம்

தேசியப் படைப்பாளிகள் விருதில் பங்கேற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 11 FEB 2024 8:20PM by PIB Chennai

மை கவ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய படைப்பாளிகள் விருது அறிவிப்பில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய படைப்பாளிகள் விருது குறித்து மை கவ் இந்தியா வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து பிரதமர்  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

"நமது படைப்பாளர் சமூகத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பு, இந்தியா முழுவதும் உள்ள அசாதாரணத் திறமைகளை வெளிக்கொணர்கிறது. அவர்கள் புதுமைகளை ஏற்படுத்துபவர்களாக இருந்தாலும், ஊக்கமளிப்பவர்களாக இருந்தாலும் அல்லது மாற்றத்தைத் தூண்டுபவர்களாக இருந்தாலும், நாம் நமது இளைஞர் சக்தியைக் கொண்டாட விரும்புகிறோம்.

பங்கேற்பு செய்யுங்கள், திறமையான படைப்பாளிகளை நாடு உற்சாகப்படுத்தட்டும்!"

***

ANU/SMB/IR/RR



(Release ID: 2005190) Visitor Counter : 49