குடியரசுத் தலைவர் செயலகம்

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Posted On: 24 JAN 2024 4:30PM by PIB Chennai

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டுக்  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2024 ஜனவரி 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் .

இந்த உரை  தேசிய அளவிலான ஆகாசவாணி  அலைவரிசைகளில் இரவு 07.00 மணி முதல் ஒலிபரப்பப்படும்.   தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். தூர்தர்ஷனில் இந்தி மற்றும் ஆங்கில உரையின்  ஒளிபரப்பைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் மண்டல அலைவரிசைகளில் அந்தந்த மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படும். அகில இந்திய வானொலி,  மாநில மொழியிலான உரைவடிவை அந்தந்த மாநில அலைவரிசைகளில் இரவு 09.30 மணி முதல் ஒலிபரப்பும்.  

***

ANU/SMB/BS/RS/KRS



(Release ID: 1999264) Visitor Counter : 136