பிரதமர் அலுவலகம்
தெய்வப் புலவர் திருவள்ளுவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JAN 2024 11:24AM by PIB Chennai
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.”
***
ANU/SMB/PKV/RR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1996551)
வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam