குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 12 JAN 2024 6:42PM by PIB Chennai

லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு, பொங்கல் (முறையே ஜனவரி 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வருகிறது) பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பொங்கல் ஆகிய புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் எனது சக குடிமக்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

“இந்த விழாக்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தின் வாழும் வடிவங்களாகவும், வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னங்களாகவும் உள்ளன. இந்த சந்தர்ப்பங்களில், புனித நதிகளில் நீராடி, தர்மம் தொடர்பான மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகள் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகின்றன.

 

இந்த வேளாண் திருவிழாக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஊக்குவிக்கின்றன. இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நமது விவசாயிகளின் கடின உழைப்பையும் நாம் அங்கீகரிக்கிறோம்.

இந்தப் பண்டிகைகள் அன்பு மற்றும் நல்லிணக்க உணர்வை வளர்ப்பதோடு, நம் நாட்டை மேலும் அமைதியாகவும் செழிப்பாகவும் மாற்ற பங்களிக்கட்டும்" என்று குடியரசுத்தலைவர் தமது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

 

(Release ID: 1995632)

ANU/AD/SMB/RS/KRS


(Release ID: 1995679) Visitor Counter : 130