பிரதமர் அலுவலகம்

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் பாராட்டு

இயற்கை விவசாயம் மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது: பிரதமர்

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர்

Posted On: 08 JAN 2024 3:18PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

2017 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயியான மிசோரம் மாநிலம் ஐஸ்வாலைச் சேர்ந்த சுயாயா ரால்டே, இஞ்சி, மிசோ மிளகாய் மற்றும் பிற காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார், மேலும் தனது விளைபொருட்களை புது தில்லி வரை உள்ள நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்று குறிப்பிட்டார், இதன் மூலம் அவரது வருமானம் ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை கணிசமாக அதிகரித்துள்ளது. 

 

தனது விளைபொருட்களை சந்தையில் விற்பது குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த திரு ரால்டே, வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனை சங்கிலித் தொடர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த தொந்தரவும் இல்லாமல் விற்க ஒரு சந்தை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டில் உள்ள பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், விவசாயிகள் திரு ரால்டே வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வழிநடத்துவதாகவும் பிரதமர் திருப்தி தெரிவித்தார். மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கை விவசாயம் முக்கியமானது என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில், ரசாயனமற்ற பொருட்களுக்கான சந்தை 7 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நுகர்வோருக்கு சிறந்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், வரப்பில் நின்று இருப்பவர்களும் வெள்ளாமையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

***

ANU/SM/IR/RR/KRS
(Release ID: 1994146)



(Release ID: 1994337) Visitor Counter : 96