பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 28 DEC 2023 1:17PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

 

“மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் ஏற்பட்ட  சாலை விபத்து நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது: பிரதமர் ”

 

***

(Release ID: 1991187)

ANU/SMB/IR/RS/KRS

 
 
 


(Release ID: 1991269) Visitor Counter : 90