பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

கிராம ஊராட்சிகளில் டிஜிட்டல் மயமாக்கல்

Posted On: 13 DEC 2023 1:43PM by PIB Chennai

நாட்டில் உள்ள 2,69,073 கிராம ஊராட்சிகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளில், 226063 கிராம ஊராட்சிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து மாநிலத்துக்கு உட்பட்டது என்பதால், கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கணினிகளை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாகும்.

இருப்பினும், 01.04.2022 முதல் 31.03.2026 வரை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் வருடாந்திர செயல் திட்டத்தில் முன்மொழிந்தபடி மற்றும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் வரையறுக்கப்பட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட கணினிகளை வழங்குவதன் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளின் செயல்பாட்டை ஆதரிப்பதில் வடகிழக்கு மாநிலங்களை மையமாகக் கொண்டு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்குத் துணைபுரிகிறது. இதுதவிர, 15-வது நிதிக்குழுவின் கீழ் வழங்கப்படும் அடிப்படை மானியங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கணினி மயமாக்கவும் பயன்படுத்தலாம்.

நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதற்காக பாரத் நெட் திட்டம் தொலைத்தொடர்புத் துறையால் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாட்டில் 2.12 லட்சத்துக்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துக்களில் சேவை அளிக்கத் தயார் நிலையில் உள்ளன.

பாரத் நெட்டின் பரப்பளவு 30.06.2021 முதல் அனைத்து மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் வீடுகளுக்குக் கண்ணாடி இழை இணைப்புகளை வழங்குவதற்கான பிஎஸ்என்எல்லின் இலக்குகள் 2024-25 க்குள் பாரத் நெட் மூலம் நிறைவேற்றப்படும்.

இவற்றில் தமிழ்நாட்டில் 6837 கிராமப் பஞ்சாயத்துக்களில் சேவைக்குத் தயார் நிலையிலும், 2675 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்பாட்டு நிலையிலும் உள்ளன.

***

SMB/IR/RR/KPG

 



(Release ID: 1985899) Visitor Counter : 85