சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்ட உதவி முறையை வலுப்படுத்துதல்

Posted On: 08 DEC 2023 2:38PM by PIB Chennai

1987-ஆம் ஆண்டின் சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை வழங்குவதற்காக அரசு தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தை (என்.எல்.எஸ்.ஏ) அமைத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, வட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சட்ட சேவை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், 2023 முதல் செப்டம்பர், 2023 வரை 7.45 லட்சம் பேருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.  நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 4.02 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. 2023 சட்டப்பணிகள் ஆணையங்கள் / நிறுவனங்களை வலுப்படுத்த அரசு அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. மானிய உதவியின் கீழ் நிதி ஆண்டுதோறும் அதற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறது.

மேலும், "இந்தியாவில் நீதிக்கான முழுமையான அணுகலுக்கு புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்" என்ற தலைப்பில் நீதிக்கான அணுகல் திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இது தொலைச்சட்டம் (டெலி-லா) மூலம் வழக்குக்கு முந்தைய ஆலோசனையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரத்துறை, கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1983954)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 1984092) Visitor Counter : 74


Read this release in: English , Urdu , Hindi , Punjabi