தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தேசிய ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவதற்கான உள்ளீடுகள் குறித்த டிராய் முன்-ஆலோசனை அறிக்கை குறித்த கருத்துக்களைப் பெற கடைசித் தேதி நீட்டிப்பு

Posted On: 30 OCT 2023 2:08PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023 செப்டம்பர் 21 அன்று தேசிய ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவதற்கான உள்ளீடுகள் குறித்த முன்-ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. ஆலோசனைக்கு முந்தைய அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 2023, அக்டோபர் 10 என நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக, எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 2023 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது கால அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு  பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2023 நவம்பர் 7வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுகருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது.

கருத்துகளை மின்னஞ்சல் ஐடியான advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in ஆகியவற்றிற்கு மின்னணு வடிவத்தில் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம்  தகவலுக்கு, டிராய் சிஎஸ்ஆர் தலைமை இயக்குநர்  மற்றும் ஆலோசகர் (பி & சிஎஸ்) திரு அனில் பரத்வாஜை +91-11-23237922. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

------

ANU/PKV/SMB/KPG



(Release ID: 1973027) Visitor Counter : 85