பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

'வடகிழக்கு பிராந்தியத்திற்கான பழங்குடியினர் தயாரிப்புகளை பிரபலப்படுத்துதல்' (பி.டி.பி-என்.இ.ஆர் 2.0) திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை நாளை முதல் ட்ரைஃபெட் தொடங்குகிறது

Posted On: 20 SEP 2023 1:49PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரைஃபெட்) 'வடகிழக்கு பிராந்தியத்திற்கான பழங்குடியினர் தயாரிப்புகளை பிரபலப்படுத்துதல்' (பி.டி.பி-என்.இ.ஆர் 2.0) திட்டத்தின்  2ஆம்கட்டத்தை நாளை தொடங்கி நவம்பர் 10 வரை  நடத்தவுள்ளது. இந்த நிலையில், 29 மாவட்டங்களில், டிரைஃபெட், வடகிழக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (என்.இ.எச்.எச்.டி.சி) - மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் மற்றும் மாநில நிர்வாகக் குழுக்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் பயணம் செய்து, பழங்குடி கைவினைஞர்களை மீண்டும் ஒரு முறை அணுகி, அவர்களின் கலாச்சார செழுமையையும் பாரம்பரியத்தையும் நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளிப்படுத்தும்.

மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, வடகிழக்கு பிராந்தியத்தின் பட்டியல் பழங்குடியினரின் நலனுக்காக மத்திய துறை திட்டமான 'வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து பழங்குடி தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் மற்றும் தளவாட மேம்பாடு (பி.டி.பி-என்.இ.ஆர்)' என்னும் திட்டத்தை 2023 ஏப்ரல் 18 அன்று மணிப்பூரில் தொடங்கி வைத்தார்.

இந்த முதல் கட்டத்தில் 44 பழங்குடி இனத்தைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்கேற்றனர். 3100-க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை டிரைஃபெட் கொள்முதல் செய்தது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959003

***

ANU/AD/PKV/AG/KV



(Release ID: 1959100) Visitor Counter : 100