பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தைப் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2023 10:27AM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட், 2023 செப்டம்பர் 18 அன்றுடன் முடிவடைந்த தமது இரண்டு நாள் பயணத்தின் போது, அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டின் (ஏ.என்.சி) தலைமையகத்திற்கு நேரில் சென்றார். இந்தப் பயணத்தின்போது ஏ.என்.சி ஏர் மார்ஷல் சாஜு பாலகிருஷ்ணனுடன் அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.  இத்தகைய விவாதங்கள், அழகிய தீவுக்கூட்டத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

 

ஐ.என்.எஸ் உத்க்ரோஷில் உள்ள சங்கல்ப் ஸ்மாரக்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தி, அமைச்சர் தனது பயணத்தைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே.ஜோஷியை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்தார்.

***

ANU/AP/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1958713) வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu