நிதி அமைச்சகம்

வாரணாசியில் 4 வது ஜி 20 நிலையான நிதி பணிக்குழு கூட்டம் நிறைவடைந்தது

Posted On: 14 SEP 2023 8:29PM by PIB Chennai

இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி 20 நிலையான நிதி பணிக்குழுவின் (எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி) 4வது மற்றும் கடைசிக் கூட்டம் இன்று வாரணாசியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்தக் கூட்டத்தில், ஜி 20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள் மற்றும் உலக வங்கி, புதிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மேலும் பல அமைப்புகளும் கலந்து கொண்டன.

உலகளாவிய வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பசுமையான, மிகவும் நெகிழ்வான மற்றும் உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை நோக்கிய மாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் நிலையான நிதியை அணி திரட்டுவதை ஜி 20 நிலையான நிதி பணிக்குழு (எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி) நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்குழுவின் முக்கிய நோக்கம் தனியார் மற்றும் பொதுத்துறையின்  நிலையான நிதியை அளவிட உதவும் சர்வதேச பணிகளை முன்னெடுப்பதும், அவ்வாறு செய்வதன் மூலம், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதும் ஆகும். 2021 ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்ட ஜி 20 நிலையான நிதி வரைபடம், எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி செயல்படுவதற்கும் எதிர்கால பணிகளை மேற்கொள்வதற்கும் மையமாகும்.

 

இந்த இலக்கை நோக்கி, 2023 ஆம் ஆண்டில், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு நிதியளிப்பதற்கான பணிகளையும், காலநிலை நிதிக்கான சரியான நேரத்தில் மற்றும் போதுமான வளங்களை நிகழ்ச்சி நிரல் முன்னுரிமைகளாக திரட்டுவதற்கான பணிகளையும் எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி மேற்கொண்டது.

சமீபத்தில் நடைபெற்ற தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி 20 புதுதில்லி  பிரகடனம் 2023, இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி மேற்கொண்ட பணிகளை வரவேற்றுள்ளது. குவஹாத்தி, உதய்ப்பூர், மகாபலிபுரம் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் நான்கு நிலையான நிதி பணிக்குழு (எஸ்.எஃப்.டபிள்யூ.ஜி) கூட்டங்கள் நடைபெற்றன. வாரணாசியில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டம், அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை பகுதிகளுக்கான பரிந்துரைகளின் வடிவத்தில் எஸ்.எஃப்.டபிள்யூ.ஜியால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் இறுதி ஜி 20 நிலையான நிதி அறிக்கை 2023 மீது கூட்டாக ஒப்புக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. ஜி 20 நிலையான நிதி செயல்திட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் (ஐஓக்கள்) அடைந்த முன்னேற்றம் குறித்தும் 4வதுகூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

நிலையான வளர்ச்சியை அடைவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை. SFWG கூட்டங்கள் முழுவதிலும், இணைத் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் சீனா, உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர் நாடுகள், அத்துடன் சர்வதேச அமைப்புகள் இந்த ஆண்டு SFWG இன் கீழ் முக்கிய விளைவுகளாக டெலிவரிகளை இறுதி செய்வதில் தீவிரமாக பங்கேற்று பங்களித்தன.

******** 

AD/PKV/KRS



(Release ID: 1957518) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi , Telugu