பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பாரத மண்டபத்தில் கைவினைப்பொருட்கள் சந்தையில் உள்ள ட்ரைப்ஸ் இந்தியா அரங்கில் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக பழங்குடியினரின் பல்வேறு கலை மற்றும் கலைப்பொருட்களை காட்சிப்படுத்துகிறது
                    
                    
                        
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பழங்குடியினரால் போற்றப்படும் பித்தோரா கலையின் செயல்விளக்கம் இடம்பெறுகிறது
                    
                
                
                    Posted On:
                08 SEP 2023 6:01PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பழங்குடியினர் நல அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் (டிரைஃபெட்) 'ட்ரைப்ஸ் இந்தியா' அரங்கில் பாரம்பரிய பழங்குடியினரின் கலைகள், கலைப்பொருட்கள், ஓவியங்கள், மண்பாண்டங்கள், ஆடைகள், இயற்கை பொருட்கள் மற்றும் பொன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. 2023 செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சி கைவினைப்பொருட்கள் சந்தையில் (ஹால் 3) காட்சிப்படுத்தப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், பித்தோரா கலையின் புகழ்பெற்ற கலைஞருமான ஸ்ரீ பரேஷ் ரத்வா கலந்து கொண்டு, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரத்வா, பிலாலா, நாயக் மற்றும் பில் பழங்குடியினர் போற்றும் சடங்கு கலையின் செழுமை மற்றும் சடங்கு கலையின் நேரடி செயல்விளக்கத்தை வழங்குவார். தொன்மையான கலையின் மீதான ஆர்வமிக்க அணுகுமுறை நமது கலாச்சார செழுமைக்கு புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கோண்டு ஓவியமும், ஒடிசாவைச் சேர்ந்த கைவினைஞர்களின் சவுரா ஓவியமும் கண்ணைக் கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன. லே-லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் இருந்து அங்கோரா மற்றும் பஷ்மினா சால்வைகளைத் தவிர, போத் மற்றும் பூட்டியா பழங்குடியினரால் நெய்யப்பட்டவை தவறவிடக்கூடாத பொருட்களாகும். நாகாலாந்தின் கொன்யாக் பழங்குடியினரின் வண்ணமயமான நகைகள் காண்போரை ஈர்க்கின்றன.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஸ்வரி பட்டுப்புடவைகள் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது அணியப்படுகின்றன. அசாமைச் சேர்ந்த போடோ பழங்குடியினரால் மிகவும் நுட்பமாக தயாரிக்கப்பட்ட எரி அல்லது "மில்லினியம் சில்க்" செழுமைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.
உருகிய உலோகங்கள், மணிகள், வண்ணமயமான கண்ணாடித் துண்டுகள், மர உருண்டைகள் ஆகியவற்றால் செதுக்கப்பட்ட தோக்ரா நகைகள் கவர்ச்சி மற்றும் செழுமையைத் தருகின்றன. இந்தப் பாரம்பரிய நகைகள் இயற்கையான கருப்பொருள் கொண்டவை மற்றும் நெறிமுறை ரீதியாக அதிநவீனமானவை. மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடி கைவினைஞர்கள் இந்த உள்ளார்ந்த கலைப் பொருட்களை வடிவமைத்துள்ளனர்.
உலோக அம்பாபாரி கைவினையில் ராஜஸ்தானின் மீனா பழங்குடி கைவினைஞர்களிடமிருந்து அழகு மிகுந்த நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. பூக்கள், பறவைகள் போன்றவற்றின் மென்மையான வடிவமைப்புகளை மேற்பரப்பில் இணைப்பதன் மூலம் வண்ணமயமாக்கும் கலையான பற்சிப்பியைப் பயன்படுத்தி அல்லது உலோக மேற்பரப்பை அலங்கரிக்கும் கலையைப் பயன்படுத்தி இவை வடிவமைக்கப்படுகின்றன. இது போன்ற கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் வீடுகளுக்கு இது தனித்துவமான பாரம்பரிய அழகையும் அமைதியையும் அளிக்கிறது.
ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரக்கு பள்ளத்தாக்கு காபி, தேன், முந்திரி, அரிசி, மசாலாப் பொருட்கள் போன்ற இயற்கைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் பன்முகத்தன்மையில் ஒற்றுமை, கலாச்சார மற்றும் பாரம்பரிய கொலாஜ், நாட்டின் பாரம்பரியத்தின் செழுமை ஆகியவற்றை சித்தரிக்கும் பல தயாரிப்புகளுடன் ட்ரைப்ஸ் இந்தியா அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Photo1X1IR.jpg)
Photo2Y22E.jpg)
Photo3N7L5.jpg)
Photo4ZJCK.jpg)
*****
ANU/AD/KP
                
                
                
                
                
                (Release ID: 1955636)
                Visitor Counter : 274