நிதி அமைச்சகம்

முன்கூட்டிய தீர்ப்புகளுக்கான வாரியத்தை செயல்படுத்துதல்

Posted On: 19 AUG 2023 12:35PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) 2021 செப்டம்பரில் முன்கூட்டிய தீர்ப்புகளுக்கான மூன்று வாரியங்களை அமைத்தது. மேலும், 2022 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க அறிவித்தலின் மூலம், முன்கூட்டிய தீர்ப்புகளின் முழு செயல்முறையையும் குறைந்தபட்ச உள்ளிணைப்புடன் மாற்றுவதையும், அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை,  பொறுப்புடைமை ஆகியவற்றை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு மின்-முன்கூட்டிய தீர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தில்லி மற்றும் மும்பையில் இதற்கான வாரியங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த வாரியங்கள் மின்னஞ்சல் அடிப்படையிலான நடைமுறைகள் மற்றும் காணொலி  மூலம் விசாரணை நடத்தத் தொடங்கின.

ஒரு வெளிநாடு வாழ் முதலீட்டாளர் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்பே வருமான வரிக்கான தனது பொறுப்பு குறித்த தகவலை உறுதியாகப் பெற முடியும். மேலும், ஒரு குடியிருப்பாளர் நிறுவனம் கூட ஒரு பரிவர்த்தனையின் வரிவிதிப்பு குறித்த தீர்ப்பைப் பெறலாம். இதன் மூலம், நீண்டகால வழக்குகளைத் தவிர்க்கலாம். இது மொத்தம் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடையது.

முன்கூட்டிய தீர்ப்புகளைப் பெறுவதற்கான செயல்முறை குறித்து வரி செலுத்துவோருக்கு பொதுவான வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குவதற்காக,  முன்கூட்டிய தீர்ப்புகளுக்கான வாரியத்தின் கையேடு 2023 ஆகஸ்ட் 18 அன்று சிபிடிடி தலைவரால் வெளியிடப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில், சிபிடிடியின் தலைவர், சர்ச்சைகளைத் தடுப்பது, சர்ச்சைகளை உடனடியாகத் தீர்ப்பது ஆகியவற்றில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். முன்கூட்டிய தீர்ப்புகளுக்கான வாரியம் போன்ற பொறிமுறைகளை உருவாக்குவது இந்த திசையில் ஒரு படியாகும்.

******

ANU/SM/PKV/DL



(Release ID: 1950413) Visitor Counter : 125