பிரதமர் அலுவலகம்

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தை பிரதமர் பாராட்டினார்

Posted On: 18 AUG 2023 1:10PM by PIB Chennai

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம், நமது நாட்டின் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில்  பிரதமர்   கூறியுள்ளதாவது:

“பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக  முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவான அஞ்சல்  அலுவலகத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். நமது நாட்டின் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக, இது தற்சார்பு இந்தியாவின் உணர்வையும் பிரதிபலிக்கிறது.  அஞ்சல் அலுவலகம் முழுமை பெற பாடுபட்டவர்களுக்கு பாராட்டுகள்."

----

ANU/SM/BR/KPG

 



(Release ID: 1950109) Visitor Counter : 191