கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்களுக்கான ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து இணைப்பு
Posted On:
08 AUG 2023 2:53PM by PIB Chennai
நாட்டின் அனைத்து முக்கிய துறைமுகங்களும் ரயில் மற்றும் நான்கு வழிச் சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, சரக்குகளைக் கையாளும் பெரிய துறைமுகங்கள் மற்றும் பிற 66 துறைமுகங்களில், 13 துறைமுகங்கள் ரயில் மூலமாகவும், 24 துறைமுகங்கள் 4 வழிச் சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2 துறைமுகங்கள் நிலக்கரியையும், 2 துறைமுகங்கள் சிமெண்ட்டையும், ஒரு துறைமுகம் உரங்களையும், 7 துறைமுகங்கள் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களையும் கையாளுகின்றன.
2022-23 ஆம் ஆண்டில் இந்திய துறைமுகங்களில் கையாளப்பட்ட மொத்த சரக்குகளில், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் முறையே 493.85 மில்லியன் டன் மற்றும் 133.32 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளன.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1946878)